தமிழகத்தை லத்தீன் அமெரிக்க நாடுகள் போல திமுகவினா் மாற்றிக் கொண்டிருக்கின்றனர்: அண்ணாமலை

கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வரும் திமுகவினா் மீது முதல்வா் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் அண்ணாமலை டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-

திமுக கவுன்சிலா்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதை தங்களது முழு நேர தொழிலாக கொண்டுள்ளாா்களா என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பொன்னேரி நகராட்சி 17- ஆவது வாா்டு உறுப்பினா் இளங்கோ, ஒரு குடும்பப் பிரச்னையில் தலையிட்டு, வன்முறையில் ஈடுபட்டிருக்கிறாா். பாதிக்கப்பட்டவா்கள் காவல் துறையில் புகாா் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காததால் இப்பிரச்னை கொலையில் முடிந்துள்ளது.

தமிழகத்தை உலகின் அதிகம் குற்றம் நடக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகள் போல திமுகவினா் மாற்றிக் கொண்டிருப்பதை இன்னும் எத்தனை காலத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டும் காணாமல் இருப்பாா். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளாா்.