சர்வாதிகாரத்தை முடிவு கட்டும் நேரம் தொடங்கி விட்டது: உத்தவ் தாக்கரே

கொள்ளையடித்தவர்கள் நாட்டை விட்டு வெளியே இருக்கும்போது திருடனை திருடன் என்று அழைப்பது குற்றமாகி உள்ளது என்று உத்தவ் தாக்கரே கூறினார்.

பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை அடுத்து, அவரது எம்.பி. பதவி பதவி பறிக்கப்பட்டது. இதுகுறித்து மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

கொள்ளையடித்தவர்கள் நாட்டை விட்டு வெளியே இருக்கும்போது திருடனை திருடன் என்று அழைப்பது குற்றமாகி உள்ளது. ராகுல்காந்தி மீதான நடவடிக்கை ஜனநாயக படுகொலை. அனைத்து விசாரணை அமைப்புகளும் அழுத்தத்தில் உள்ளன. சர்வாதிகாரத்துக்கு முடிவு கட்டும் நேரம் தொடங்கி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.