ஜெயம் ரவியின் 32- வது படத்தில் இணையும் கீர்த்தி ஷெட்டி!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி ஷெட்டி இவர் பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஜெயம் ரவியின் 32- வது படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி ‘உப்பென்னா’ படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘தி வாரியர்’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார். தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கஸ்டடி’ திரைப்படத்தில் நாகசைதன்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து மலையாள திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி ஷெட்டி, ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ஜெயம் ரவியின் 32- வது படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்குகிறார். ரூ.100 கோடியில் உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.