வெற்றிமாறன் மனித வடிவில் இருக்கும் மிருகம்: சீமான்

‘விடுதலை’ படத்திற்காக இயக்குனர் வெற்றிமாறன் போட்டுள்ள உழைப்பு குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெற்றிமாறனின் ‘விடுதலை’ தமிழ் சினிமாவில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தனது படங்களின் வாயிலாக சமூக பிரச்சனைகள் குறித்து தீர்க்கமாக பேசி வரும் வெற்றிமாறன், இந்தப்படத்திலும் அழுத்தமான அரசியலை பேசியுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வரும் ‘விடுதலை’ பட இயக்குனர் வெற்றிமாறன் குறித்து சீமான் பேசியுள்ள சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வெற்றிமாறன் குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த படைப்பாளிகள் இருந்து வருகின்றனர். பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன் என சிறந்த படைப்பாளிகள் இருந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் வெற்றிமாறன், ராம் உள்ளிட்டோர் சிறந்த படங்களை தந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதனை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. ‘விடுதலை’ போன்ற படத்தை கொடுப்பதற்கு கடும் உழைப்பை கொட்ட வேண்டியுள்ளது. காட்டுக்குள் பயணிச்சு மலையில் ஏறி கடுமையான உழைப்பை கொடுத்துள்ளார் வெற்றிமாறன். அவர் மனித வடிவில் இருக்கும் மிருகம். அந்த வெறியில் படம் எடுக்கிறார் அவர். அது பாராட்டத்தக்கது என தெரிவித்துள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் குறித்து சீமான் பேசியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.