அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத்!

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே துறை அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அவர்கள் காட்டிய அலட்சியம்.. போதிய விழிப்புணர்வைக் காட்டாத விதம் தான் உயிரிழப்புகள் இந்தளவுக்கு அதிகரிக்கக் காரணமாக இருந்துள்ளது. இது குறித்து உயர்மட்ட விசாரணை அமைக்க வேண்டும். இந்த விபத்திற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரொம்பவே அலட்சியம் இருந்துள்ளனர். அவர்கள் ரயில்வேயை முற்றிலுமா அழித்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.