செந்தில்பாலாஜி கைது மோடி அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: மல்லிகார்ஜு கார்கே

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நள்ளிரவில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருப்பது மோடி தலைமையிலான அரசின் பழிவாங்கல் நடவடிக்கையே என்று காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இது எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மோடி தலைமையிலான அரசு மேற்கொள்ளும் துன்புறுத்தல் மற்றும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையே அன்றி வேறொன்றும் இல்லை. இதுபோன்ற வெட்கக்கேடான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகளான நாங்கள் யாரும் அஞ்சிவிடமாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.