கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேரணியாக சென்று மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் பேரணியாக சென்று நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7 ஆம் தேதி அவர் காலமானார். கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் இன்று அவரது 5 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமை­திப் பேரணி நடை­பெ­ற்றது. இதில் திமுக பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்சருமான துரை­மு­ரு­கன், பொரு­ளா­ர் டி.ஆர்.பாலு எம்.பி., திமுக முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட திமுக மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

முன்னதாக சென்னை காலை 7.30 மணிக்கு சென்னை அண்ணா சாலை ஓமந்­தூ­ரார் வளா­கத்­தில் அமைந்­துள்ள கருணாநிதி சிலை அரு­கி­லி­ருந்து இந்த பேரணி புறப்பட்டது. அங்கு வைக்கப்பட்டு இருந்த கருணாநிதி உருவப் படத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக முத்த நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து அமைதிப் பேரணி தொடங்கியது. ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்து சென்னை வாலாஜா சாலை வழியாக, முக ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அமைதிப் பேரணி சென்றனர். அதை தொடர்ந்து காம­ரா­ஜர் சாலை­க்கு சென்ற பேரணி, மெரினா கடற்கரையை ஒட்டி, அண்ணா நினைவிடம் அருகே அமைந்­துள்ள கருணாநிதி நினை­வி­டத்­தில் மலர்­­வளை­யம் வைத்து அஞ்சலி செலுத்­தினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு மற்றும் திமுக மூத்த தலைவர்கள் கருணாநிதி நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார்கள். இதில், தமிழ்நாடு அமைச்­சர்கள், திமுக மாவட்­ட செய­லா­ளர்­கள், முன்­னாள் – இந்­நாள் நாடாளுமன்ற, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், தலை­மைக் கழ­கச் செயலாளார்கள், தலை­மைச்­செ­யற்­குழு, பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள், மாவட்­டக் கழக, பகு­திக் கழக, வட்­டக் கழக நிர்­வா­கி­கள், மாந­க­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­கள் மற்­றும் இளை­ஞர் அணி, மக­ளிர் அணி, மாண­வர் அணி, இலக்­கிய அணி, தொழி­லா­ளர் அணி, வழக்­க­றி­ஞர் அணி, தொண்டர் அணி, மீன­வர் அணி, ஆதி­தி­ரா­வி­டர் நலக்­குழு, மக­ளிர் தொண்­டர் அணி, கலை, இலக்­கிய பகுத்­த­றி­வுப் பேரவை, மருத்­து­வர் அணி, பொறி­யா­ளர் அணி, சிறு­பான்­மை­யி­னர் நல­உரிமைப் பிரிவு, வர்த்­த­கர் அணி, தகவல்­தொ­ழில்­நுட்ப அணி, சுற்­றுச் சூழல் அணி, அயலக அணி ஆகிய அனைத்து அணி­யி­ன­ரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இந்த பேரணியில் கலந்து கொண்ட சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், 146வது வார்டு கவுன்சிலருமான ஆலப்பாக்கம் சண்முகத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறைந்த கவுன்சிலர் சண்முகம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.