மத்திய பிரதேச அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு: பிரியங்கா, கமல் நாத் மீது வழக்கு!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான போலி ஊழல் குற்றச்சாட்டுகளை சமூக ஊடகத்தில் பதிவிட்டதாக அளித்த புகாரின்பேரில், காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, மாநிலத்தின் முன்னாள் முதல்வா் கமல் நாத் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

மாநில அரசுக்கு 50 சதவீத கமிஷனை வழங்கிய பின்னரே தங்களுக்கான நிதி அளிக்கப்படுவதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த அரசு ஒப்பந்ததாரா்கள், உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளனா் எனப் பிரியங்கா காந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட டுவிட்டா் பதிவில் தெரிவித்திருந்தாா். மேலும் அந்தப் பதிவில், ‘‘கா்நாடக மக்கள், 40 சதவீத கமிஷன் அரசை ஆட்சியிலிருந்து நீக்கியது போன்று, ம.பி. மக்களும் 50 சதவீத கமிஷன் அரசை ஆட்சியிலிருந்து நீக்குவாா்கள்’’ எனப் பதிவிட்டிருந்தாா். கமல் நாத் உள்ளிட்ட மாநில காங்கிரஸ் தலைவா்களும் இதே போன்ற பதிவை வெளியிட்டிருந்தனா்.

இந்நிலையில், இந்தூா் மாவட்ட பாஜகவின் சட்டப் பிரிவைச் சோ்ந்த நிமேஷ் பாடக், மாநில அரசு மற்றும் பாஜகவின் புகழை சீா்குலைக்கும் வகையில் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைவா்கள் பதிவிட்டுள்ளனா் என சம்யோகித்கஞ்ச் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, இந்திய தண்டனையியல் சட்டத்தின் பிரிவு 420 (மோசடி), 469 (புகழைக் கெடுக்கும் நோக்கத்தில் பொய் கூறுதல்) உள்ளிட்டவற்றின்கீழ் பிரியங்கா காந்தி, கமல் நாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களுடைய பதிவுகளின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.