வைர வாட்ச், தங்க ஆபரணங்களை சீமான் வீட்டில் புதைத்து வைத்துள்ளார்: விஜயலட்சுமி

சுவிட்சர்லாந்து, ஜெனிவாவில் இருந்து வைர வாட்ச், தங்க ஆபரணங்கள் சீமான் அவர்களுக்கு வரும். நகைகளை சீமான் வீட்டில் புதைத்து வைத்துள்ளார் என விஜயலட்சுமி கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்யக் கோரி நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார். இது குறித்து சீமானிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ‘கேவலத்திற்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது’ என கூறி இருந்தார்

இந்த நிலையில் சீமான் குறித்து நடிகை விஜயலட்சுமி மற்றும் தமிழர் முன்னேற்றப் படை அமைப்பின் வீரலட்சுமி ஆகியோர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தமிழர் முன்னேற்றப் படையின் வீரலட்சுமி கூறுகையில், சீமான் கேவலத்தை பற்றி பேசமாட்டேன் என்று சொன்னார். ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன் 10 ஆயிரத்திற்கும் 20 ஆயிரத்திற்கும் அக்கா காலடியில் இருந்தார். சுவிட்சர்லாந்து, ஜெனிவாவில் இருந்து வைர வாட்ச், தங்க ஆபரங்கணங்கள் சீமான் அவர்களுக்கு வரும் என விஜயலட்சுமி சொல்லி உள்ளார். அந்த நகைகளை போட்டு அழகு பார்த்துவிட்டு சீமான் தனது ஊரான இளையான்குடிக்கு தாயிடம் கொடுத்து விடுவார். அந்த நகைகளை சீமானின் அம்மா நிலத்தில் புதைத்துவிடுவார்களாம் என கூறி உள்ளார்.

பின்னர் பேசும் நடிகை விஜயலட்சுமி கூறுகையில், சீமான் நகை போட்டிருக்கும் செயின் ஒன்றை உங்களுக்கு நான் வீடியோவாக காட்டி உள்ளேன். அந்த நகையின் பதிப்பு 12 ஆண்டுகளுக்கு முன்பே 20 லட்சம் வரை இருக்கும். அது அப்படியே அவரது அம்மா வீட்டுக்கு போய்விடும். அப்படி இருந்தவர் எனக்கு வாடகை கட்டவே காசில்லை என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். ஆனால் அவர் என் மீது வருமானவரி ரெய்டு நடத்த வேண்டும் என சொல்லி வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அவரது இன்கம்டாக்ஸ் என்ன என்பதை பார்க்க வேண்டும். அவருக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்பதை திமுக அரசு ஆராய வேண்டும் என்று கூறியுள்ளார்.