ஒரே மாதிரியான பாத்திரங்களில் நடிக்க விருப்பம் இல்லை: சாக்‌ஷி அகர்வால்

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரே மாதிரியான பாத்திரங்களில் நடிக்க விருப்பம் இல்லை என கூறினார்.

கோலிவுட் சினிமாவில் காலா, விஸ்வாசம், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இருப்பவர், சாக்‌ஷி அகர்வால். இதனையடுத்து பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்‌ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. சாக்‌ஷி அகர்வால் தற்போது கடந்த ஆறு மாதங்களில் மூன்று படங்களில் நடித்து இருக்கிறார். இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறியதாவது:-

எனது கதாபாத்திரங்கள் ஒரே மாதிரியான சாயலில் இருக்க கூடாது என்பதில் கவனம் வைக்கிறேன். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் ஒட்டிக்கொள்ள விரும்பவில்லை. வித்தியாசமான குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்களில் எனது திறமையை வெளிப்படுத்த ஆசைகள் இருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் கிராமத்து வேடத்தில் நடிக்கவும் ஆசை உள்ளது.

எனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்த பட வாய்ப்புகளை கவனமாக தேர்வு செய்து வருகிறேன். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. திரைப்படம் என்பது எனது கனவு. அதனால் தான் டான்ஸ், ஆக்‌ஷன் கற்றுக்கொள்ள தனியாக கிளாஸ் போய் கொண்டு இருக்கிறேன். நான் கடவுள் இல்லை படத்தில் நான் நடித்த ஆக்‌ஷன் காட்சிகள் நன்றாக இருப்பதாக பாராட்டுகள் கிடைத்தது மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.