நார்வே எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான யோன் ஃபோஸ்ஸ நோபல் பரிசுக்கு தேர்வு!

நடப்பாண்டில், இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு நார்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் யோன் ஃபோஸ்ஸ தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடன் அறிவியல் அகாடமி, நடப்பாண்டுக்கான நோபல் பரிசுகளை அறிவித்து வருகிறது. ஏற்கனவே, மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறையில் சாதித்தவர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு நார்வே நாட்டைச் சேர்ந்த யோன் ஃபோஸ்ஸ-வுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இலக்கியப் பரிசு பெற்ற யோன் போஸ்ஸ ‘ஃபோஸ்ஸ மினிமலிசம்’ என்று அழைக்கப்படும் ஒரு மிகச் சிறந்த பாணியில் குறுகிய நாவல்களை எழுதியுள்ளார். நார்வே எழுத்தாளர் யோன் ஃபோஸ்ஸ எழுதிய புதிய நாடகம் மற்றும் உரைநடைக்காக, நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, மருத்துவம், இயற்பியல், வேதியியல் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு திங்கள்கிழமையும் (அக். 9) அறிவிக்கப்படவுள்ளன.