தமிழக முன்னாள் டிஜிபி பி.கே.ரவி காங்கிரசில் இணைந்தார்!

தமிழ்நாடு தீயணைப்பு துறை முன்னாள் டிஜிபி பி.கே.ரவி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

தமிழ்நாடு தீயணைப்பு துறை முன்னாள் டிஜிபி பி.கே.ரவி. 1989ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர் பதவிக்காலம் முடிவடைய மூன்று மாதங்கள் இருந்த நிலையில் அண்மையில் விருப்ப ஓய்வு பெற்றார். இந்த நிலையில் பி.கே.ரவி நேற்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பீகார் காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் மற்றும் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் நசீர் உசேன் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் பி.கே.ரவி காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.