காங்கிரஸ் கட்சியிடமிருந்து பாஜக கற்றுக்கொள்ள வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே!

காங்கிரஸ் கட்சியிடமிருந்து பாஜக கற்றுக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சி எப்போதும் ஏழை மக்களுடன் அவர்களுக்கு ஆதரவாக நின்றுள்ளது. இந்த ஜனநாயகத்தைக் காப்பாற்றித் தந்தவர் ஜவஹர்லால் நேரு. ஆனால், அதை வைத்துக்கொண்டு பாஜக என்ன செய்கிறது? நீங்கள் (பாஜக) காங்கிரஸிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. காங்கிரஸ் கட்சி செய்தது எல்லாம் நாட்டு மக்களுக்காக மட்டுமே. ஆனால், பாஜக செய்துகொண்டிருப்பது எல்லாம் அதானி போன்றவர்களுக்காக மட்டுமே எனக் குறிப்பிட்டார்.