மதுரையில் இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் கைது!

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் மாலை அணிவிக்கப்போன அர்ஜூன் சம்பத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.

அம்பேத்கரின் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் போஸ்ட் ஆபிஸ் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மே 17 இயக்கத்தினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தனது ஆதரவாளர்களுடன் நேற்று மாலை அணிவிக்க வந்தார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவினருக்கும் இந்து மக்கள் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அர்ஜூன் சம்பத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.