திமுக இளைஞரணி மாநில மாநாடு டிச.24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

“மிக்ஜாம்” புயலால் பெய்த பெருமழை வெள்ளம் காரணமாக சில மாவட்டங்களில் மழை, வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால் வரும் டிச.17ம் தேதி சேலத்தில் நடைபெறவிருந்த இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு டிச.24ம் தேதிக்கு மாற்றப்படுவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

“மிக்ஜாம்” புயலால் பெய்த பெருமழை வெள்ளம் காரணமாக, சில மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி, மழை, வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், வருகிற 17-12-2023 அன்று சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு தேதி மாற்றப்பட்டு, வருகிற 24-12-2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.