அமைச்சர் துரைமுருகன் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி!

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு கடந்த சில தினங்களாக சளி, இருமல் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான சிகிச்சைக்காக அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவக்குழுவினர் வழங்கி வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.