ரகுல் ப்ரீத் சிங் பாக்கெட் மணிக்காக நடிக்க வந்தாராம்!

ஜாக்கி பாக்னானியை திருமணம் செய்து கொள்ளப் போகும் ரகுல் ப்ரீத் சிங் ஏன் நடிக்க வந்தார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பாக்கெட் மணிக்காக நடிக்க வந்தாராம் ரகுல் ப்ரீத் சிங்.

கடந்த 2009ம் ஆண்டு வெளியான கன்னட படமான கில்லி மூலம் நடிகையானவர் ரகுல் ப்ரீத் சிங். அதன் பிறகு தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் நடிக்கத் துவங்கினார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆனார் ரகுல் ப்ரீத் சிங். அவ்வப்போது தமிழ் படங்களில் நடித்து வந்தாலும் கோலிவுட்டில் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவும் இல்லை. சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து ரகுல் ப்ரீத் சிங் நடித்த அயலான் படம் அண்மையில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.

அவருக்கும், பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து காதலை வீட்டில் சொல்லி அனுமதி பெற்றி திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்கள். ரகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பாக்னானியின் திருமணம் வரும் 21ம் தேதி கோவாவில் நடக்கவிருக்கிறது. மூன்று நாட்கள் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் இருவீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலரும் தான் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

இந்நிலையில் மும்பையில் இருக்கும் ஜாக்கி பாக்னானியின் வீடு அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ரகுல், ஜாக்கியின் திருமணம் பற்றி தான் சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. மேலும் அவர் நடித்த முதல் படமான கில்லி குறித்தும் ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் எதற்காக நடிகையானார் என்பதை பார்ப்போம். கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தபோது தான் கில்லி படத்தில் நடித்தார் ரகுல் ப்ரீத் சிங். பாக்கெட் மணிக்காக நடிக்க வந்தாராம். படத்தில் நடித்தால் பணம் கிடைக்கும், அதை வைத்து ஒரு கார் வாங்கலாம் என நடிக்க வந்தாராம். நடிக்க வந்தபோது சினிமா துறை பற்றி எதுவுமே தெரியாது. கில்லி படத்தில் நடித்தபோது போது தான் பல விஷயங்கள் கற்றுக் கொண்டேன் என்றார் ரகுல் ப்ரீத் சிங். பாக்கெட் மணிக்காக நடிக்க வந்தவர் இன்று பல கோடி சொத்துக்கு சொந்தக்காரர்.