பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா அபார வளர்ச்சி: பூடான் பிரதமர்!

பிரதமர் மோடியின் பத்து ஆண்டு கால ஆட்சியில் இந்தியா அபார வளர்ச்சி கண்டுள்ளது என பூடான் பிரதமர்
தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று மூன்றாவது முறையாக பதவியேற்றுக் கொள்கிறார். இந்த விழாவில் அண்டை நாடுகளை சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கேவும் இதில் கலந்து கொண்டுள்ளார். இந்த சூழலில் பிரதமர் மோடியின் பத்து ஆண்டு கால ஆட்சியில் இந்தியா அபார வளர்ச்சி கண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

“கடந்த பத்து ஆண்டுகால பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா அபார வளர்ச்சி கண்டுள்ளது. விமான நிலையம், சாலை, ரயில்வே, தகவல் தொழில்நுட்பம் என உட்கட்டமைப்பு வசதிகளில் வளர்ச்சி கண்டுள்ளது. பல்வேறு துறைகளில் நேரடி அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளது. அதனால் அடுத்த ஐந்து ஆண்டு கால வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதற்கு கடந்த கால ஆட்சி சான்று. இந்த நேரத்தில் இந்திய மக்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக மற்றும் என்டிஏ கூட்டணிக்கு எனது வாழ்த்துகள்” என அவர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பூடான் இடையிலான உறவு வலுவாக உள்ளது” எனவும் தெரிவித்தார்.