தமிழக சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.4,574 கோடி வழங்க வேண்டும்: அமைச்சர் ஆர்.ராஜேந்​திரன்!

தமிழக சுற்றுலாத்​துறை அமைச்சர் ஆர்.ராஜேந்​திரன் நேற்று டெல்​லி​யில் மத்திய சுற்றுலா, கலாச்சா​ரத்​துறை அமைச்சர் கஜேந்​திரசிங் செகாவத்தை சந்தித்​துப் பேசினார்.

தமிழக அரசின் சிறப்பு பிரதி​நிதி ஏகேஎஸ் விஜயன், திமுக எம்.பி. திருச்சி சிவா மற்றும் தமிழக அரசின் சுற்றுலாத்​துறை செயலர் பி.சந்​திரமோகன், சுற்றுலாத்​துறை இயக்​குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் உடனிருந்​தனர். அப்போது அமைச்சர் ராஜேந்​திரன், தமிழகத்​தின் பல்வேறு சுற்றுலா மேம்​பாட்டுப் பணிகளுக்கு ரூ.4573.53 கோடி வழங்க வேண்​டும் என்று மத்திய அமைச்​சரிடம் வலியுறுத்​தினார்.

இதுதொடர்பாக மத்திய அமைச்​சரிடம் அவர் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 திட்​டத்​தின்​கீழ், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாமல்​லபுரம் கடற்கரை கோயில் சுற்றுலா பயணி​களுக்கான வசதிகளை மேம்​படுத்​தும் திட்​டத்​துக்கு ரூ.30 கோடி​யும், நீலகிரி பைக்காரா இயற்கை சுற்றுலா தல மேம்​பாட்டு திட்​டத்​துக்கு ரூ.28.3 கோடி​யும் ஒதுக்​கீடு செய்ய வேண்​டும்.

சிறப்பு நிதி​யுதவி திட்​டத்​தின்​கீழ் மாமல்​லபுரத்​தில் பாரம்​பரிய நந்தவனம் அமைக்​கும் திட்​டத்​துக்கு ரூ.99 கோடி​யும், உதகை தேவலா​வில் சுற்றுலா பூந்​தோட்டம் அமைக்​கும் திட்​டத்​துக்கு ரூ.72.58 கோடி​யும், ராமேசுவரத்​தில் சுற்றுலா பயணிகள் மேம்​பாட்டு திட்​டத்​துக்கு ரூ.99 கோடி​யும் தேவை. மேலும், பிரசாத் திட்டத்​தின்​கீழ் 8 நவகிரக கோயில்​களில் சுற்றுலா பயணி​களுக்கான வசதிகளை மேம்​படுத்த ரூ.44.95 கோடியும், மராட்​டியர்​கள், நாயக்​கர்​கள், பாளை​யக்​காரர்கள் எழுப்பிய பாரம்​பரிய கட்டிடங்களை பாது​காக்​கவும், புனரமைக்​க​வும், சீரமைக்​க​வும் ரூ.3000 கோடி​யும், சுற்றுலாத்​துறை வளர்ச்​சியை மேம்​படுத்த ரூ.1,200 கோடி​யும் (மொத்​தம் ரூ.4,573.53 கோடி) வழங்க வேண்​டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.