இரட்டை குழந்தைகளுடன் தலை தீபாவளி கொண்டாடிய விக்னேஷ் சிவன், நயன்தாரா!

தங்கள் இரட்டை குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடிய இயக்குநர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி, குழந்தைகளுடன் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதனால் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் இருவரும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து உலக நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த தம்பதி சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். வாடகைத் தாய் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 2 குழந்தைகளையும் பிடித்தபடி இருந்தனர். இருவருக்கும் ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில், வாடகை தாய் மூலம் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தை பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. சட்ட விதிகளை மீறி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளதாக பலர் குற்றம்சாட்டினர்.

திருமணமாகி ஓராண்டு நிறைவடையாமல் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி மீது மத்திய மற்றும் மாநில வாடகை தாய் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விமர்சனங்களும், புகார்களும், நடவடிக்கைகளும் சென்றுகொண்டிருக்க நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில், இருவரும் தங்களின் இரட்டை குழந்தைகளுடன் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்களில், இரட்டைக் குழந்தைகளை தூக்கியவாறு இருவரும் ஜோடியாக நின்று கொண்டு ”என்றென்றும் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என்று தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.