விரைவில் தனி ஒருவன் 2 படத்தில் நடிக்க உள்ளேன்: ஜெயம் ரவி

விரைவில் தனி ஒருவன் 2 படத்தில் நடிக்க உள்ளேன் என்று ஜெயம் ரவி கூறியுள்ளார்.

இயக்குநர் மோகன் ராஜாவின் இயக்கத்தில் 2015இல் வெளியான தனி ஒருவன் திரைப்படம் மாபெறும் வெற்றி பெற்றது. இதில் மோகன் ராஜாவின் தம்பியும் நடிகருமான ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருந்தார். இவர்களுடன் அரவிந்த் சாமி, நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தற்போது இதன் 2வது பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஜெயம் ரவி யூடியூப் நேர்காணல் ஒன்றில் தனி ஒருவன் 2 பற்றி கூறியுள்ளார். இதில் அவர், “தனி ஒருவன் 2 கதை ரெடியாக உள்ளது. கதை அற்புதமாக வந்துள்ளது. 2019இல் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் பொன்னியின் செல்வன் படம் வந்ததால் தாமதம் ஆனது. விரைவில் தனி ஒருவன் 2 படத்தில் நடிக்க உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.