இரண்டாவது திருமணம் குறித்து பேசிய சோனியா அகர்வால்!

சோனியா அகர்வால் இரண்டாவது திருமணம் குறித்து மணம் திறந்து பேசியுள்ளார்.

சண்டிகரை பூர்விகமாக கொண்டவர் நடிகை சோனியா அகர்வால். 2002ஆம் ஆண்டு வெளியான நீ பிரேமக்கை என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். அடுத்து கன்னட சினிமாவில் அடியெடுத்து வைத்த நடிகை சோனியா அகர்வால் 2003ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கதில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரியானார். தொடர்ந்து மதுர, 7ஜி ரெய்ன்போ காலணி, ஒரு கல்லூரியின் கதை, ஒரு நாள் ஒரு கனவு, திருட்டுப்பயலே, புதுப்பேட்டை, வானம், சதுரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் அதிக படங்களில் நடித்த சோனியா அகர்வால் அவருடன் காதல் கொண்டார். இதையடுத்து 2006 ஆம் ஆண்டு இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அடுத்த 4 ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து பெற்றனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த சோனியா அகர்வால், விவாகரத்துக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். தொடர்ந்து தமிழ் மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் நடிகை சோனியா அகர்வால்.

சமீபத்தில் நடிகை சோனியா அகர்வால் எஸ்பிபி சரணுடன திருமண கோலத்தில் இருக்கும் போட்டோக்கள் வெளியானது. இதனை பார்த்த் ரசிகர்கள் இருவருக்கும் திருமணம் ஆனதாக வதந்தியை கிளப்பிவிட்டனர். ஆனால் வெப் சீரிஸ் ஒன்றுக்காக எடுக்ப்பட்ட புகைப்படம் அது என தெரிய வந்தது. இந்நிலையில் நடிகை சோனியா அகர்வால் தனது இரண்டாவது திருமணம் குறித்து பேசியுள்ளார். அதில் நானும், எஸ்.பி.பி.சரணும் ஒரு வெப் தொடரில் நடித்த திருமண காட்சி போட்டோ வெளியானது. அதை பார்த்து நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வதந்தி பரவியது. பல பேர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்களா? என்று விசாரித்தனர். நான் இல்லை என்று மறுப்பு சொன்னேன். எத்தனை நாட்கள் தனியாக இருப்பேன் என்று தெரியவில்லை. பொருத்தமான நபரை சந்திக்கும் போது திருமணம் நடக்கலாம். இதுவரை அந்த நபரை சந்திக்கவில்லை. அந்த நபருக்காக காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.