காதல் என்ற பெயரில் சல்மான் கானால் ஐஸ்வர்யா ராய் அனுபவித்த கொடுமைகள்!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் காதலில் சிக்கி பல கஷ்டங்களை சந்தித்து உள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

உலக அழகி ஐஸ்வர்யா ராய் இந்திய சினிமாவில் மிகமுக்கியமான நடிகைகளில் ஒருவர். தமிழ் உட்பட பல மொழிகளில் பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் ஐஸ்வர்யா ராய். இன்றளவும் ஐஸ்வர்யா ராய்க்கு என்று தனி மவுசு இருந்து தான் வருகின்றது. சமீபத்தில் கூட மணிரத்னத்தின் இயக்கத்தில் இந்திய சினிமாவே கொண்டாடிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினியாக நடித்து அனைவரையும் ஈர்த்தார் ஐஸ்வர்யா ராய். தற்போதும் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் காதலால் பல துன்பங்களை கடந்து வந்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யாவும், சல்மான் கானும் இணைந்து ‘ஹம் தில் தே சுகே சனம்’ என்ற படத்தில் ஜோடி போட்டு நடித்திருந்தனர். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இருவரும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்தனர். ஒன்றிரண்டு படத்தில் நடித்தாலே காதல் வந்துவிடும் தொடர்ந்து பல படங்களில் ஜோடிபோட்டு நடித்தவர்களுக்கு காதல் வராமல் போகுமா என்ன. ரீல் ஜோடியாக இருந்த இவர்கள் ரியல் ஜோடியாக பல இடங்களில் டூயட் பாடி வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காதல் புறாவாக சுற்றிவந்த இருவருக்கும் இடையே விரிசல் விழுந்தது. சல்மான் கான், ஐஸ்வர்யா ராயிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாகவும், அவரின் கட்டுப்பாட்டில் தான் ஐஸ்வர்யா இருக்க வேண்டும் என்றும், சல்மானின் அனுமதி இல்லாமல் எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என்று பல கண்டிஷன்களை போட்டு, ஐஸ்வர்யா ராயை டார்ச்சர் செய்துள்ளார்.

சல்மான் கானின் தொல்லை எல்லை மீறி சென்றதால், அவரை தவிர்த்து வீட்டை விட்டு வெளியில் வராமலே பல நாட்கள் துன்பத்தை அனுபவித்து வந்துள்ளார் ஐஸ்வர்யா ராய். இதனால், ஆத்திரம் தலைக்கு ஏறிய சல்மான் கான் ஒரு நாள் நள்ளிரவில் ஐஸ்வர்யா ராயின் வீட்டுக்கு வந்து கதவை தட்டி ருத்திரத்தாண்டவம் ஆடியிருக்கிறார். இதுகுறித்து ஐஸ்வர்யா ராயின் குடும்பத்தினர் சல்மான் மீது புகார் அளித்துள்ளனர். ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் பின் ஐஸ்வர்யா ராய் விவேக் ஓபராயை காதலித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

இந்நிலையில் சல்மான் கானால் பல கொடுமைகளை அனுபவித்த ஐஸ்வர்யா ராய் அதன் பிறகு அபிஷேக் பச்சனுடன் காதலில் விழுந்து அவரை கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். ஐஸ்வர்யா ராய் சல்மான் கானால் பட்ட கஷ்டம் குறித்து காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் பிரபல நடிகை ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.