பழனி முருகன் கோவிலில் வேண்டுதலை நிறைவேற்றினார் சமந்தா!

நடிகை சமந்தா பழனி முருகன் கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்தார். அந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் சூர்யா, விஜய், சிவகார்த்திகேயன்,தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். இது மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி திறமையான நடிகை என பெயர் எடுத்துள்ளார். சமந்தா நடிப்பில் நவம்பர் மாதம் யாசோதா திரைப்படம், தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. யாசோதா திரைப்படத்தைத் தொடர்ந்து ருத்ரமா தேவி படத்தை இயக்கிய இயக்குனர் குணசேகரன் இயக்கி உள்ள சாகுந்தலம் என்ற புராண இதிகாச காதல் கதையில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிந்த நிலையில் படம் நம்பவர் மாதமே வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. இதையடுத்து, சாகுந்தலம் படம் ஏப்ரல் 14ந் தேதி தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கடவுள் மீது அதீத நம்பிக்கை கொண்ட சமந்தா, பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். 600 படிகட்டுகளிலும் கற்பூரம் ஏற்றி நடந்து வந்து வேண்டுதலை நிறைவேற்றினார். அவருக்கு கோயில் நிர்வாகம் பிரசாதம் வழங்கியது. சமந்தாவுடன் 96 பட இயக்குனர் பிரேம் குமார் மற்றும் சமந்தாவின் நெருங்கிய நண்பர்கள் உடன் இருந்தனர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சமந்தா, உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தேன். தற்போது, கடவுளின் அருள் மருத்துவர்கள் ஆலோசனையால் உடல் நலம் பெற வேண்டுதல்களை நிறைவேற்ற பழனி முருகன் கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்ததாக கூறினார்.