பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை தீபிகா படுகோன்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன். பதான் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார்.

ஓம் ஷாந்தி ஓம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக என்ட்ரி கொடுத்தார் தீபிகா படுகோன். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ள தீபிகா படுகோனுக்கு என்று பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. சமூகு வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை தீபிகா படுகோன் அவ்வப்போது தனது ஹாட் போட்டோக்களை வெளியிட்டு திணறடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் பதான் படம் வெளியானது. இந்தப் படத்தில் பாலிவுட் கிங் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் தீபிகா படுகோன். பதான் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக தீபிகா படுகோன் காவி உடையில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி வருகிறார் என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் பதான் திரைப்படம் வசூலில் சக்கைப் போடு போட்டுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது பதான் திரைப்படம். சமீபத்தல் வெளியான இந்திப் படங்களில் அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமையை பெற்றுள்ளது பதான் திரைப்படம்.

பதான் படம் வசூலை குவித்து வரும் நிலையில் நடிகை தீபிகா படுகோன் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ள நடிகை தீபிகா படுகோன் 18 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார் நடிகை தீபிகா படுகோன்.