இன்ஸ்டாகிராமில் கலக்கல் போஸ்ட் போட்ட விக்னேஷ் சிவன்!

காதலர் தினத்தன்று நயன்தாரா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் பதறிப் போய்விட்டார்கள். ஒரு வேளை ஜோதிடர் சொன்ன மாதிரி விவாகரத்தோனு பயந்த நிலையில் தான் விக்னேஷ் சிவன் அவர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறார்.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். முதலில் பதவுத் திருமணம், அடுத்ததாக அனைவர் முன்பும் திருமணம் செய்து கொண்டார்கள். உயிர், உலக் எனும் இரட்டை பிள்ளைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். பிள்ளைகள் வந்த பிறகும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இடையான காதல் குறையவில்லை மாறாக அதிகரித்துள்ளது. சும்மாவே இந்த ஆளு நயன்தாராவை கொஞ்சி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவார். காதலர் தினத்தன்று சொல்லவா வேண்டும், என்ன செய்ய காத்திருக்கிறாரோ என 90ஸ் கிட்ஸுகள் புலம்பினார்கள்.

இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடாமல் அமைதியாக இருந்தார் விக்னேஷ் சிவன். அதை பார்த்தவர்களோ, இது என்ன அதிசயம் என்றார்கள். இந்நிலையில் தன் இரட்டை மகன்களை கொஞ்சும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஐ லவ் யூ உயிர், உலக் என்றார் நயன்தாரா. என்ன நயன்தாராவின் இன்ஸ்டா போஸ்ட்டில் விக்னேஷ் சிவனின் புகைப்படத்தையோ, பெயரையோ காணோம். காதலர் தினத்தன்று கணவர் இல்லாமல் போஸ்ட் போட்டிருக்கிறாரே நயன்தாரா. அவருக்கும், விக்னேஷ் சிவனுக்கும் விவாகரத்து நடக்கும்னு ஜோதிடர் சொன்னது நடக்கத் துவங்குதோ, அய்யய்யோ என ரசிகர்கள் பதறினார்கள்.

இந்த நேரத்தில் தான் தன் காதல் மனைவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு காதலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். நயன்தாராவுடன் 10 ஆண்டுகள் என தன் தங்கத்துக்கு ஐ லவ் யூ சொல்லி கொஞ்சியிருக்கிறார் விக்னேஷ் சிவன். அந்த போஸ்ட்டை பார்த்த பிறகே நயன்தாரா ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். அப்பாடி விவாகரத்து எல்லாம் இல்லை. நயன்தாராவுக்கு குசும்பு தானே. விக்னேஷ் சிவன் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு பதற வைத்துவிட்டாரே என்கிறார்கள் ரசிகர்கள்.