யாரும் காரி துப்பாத அளவிற்கு ஏதாவது பண்ணி இருக்கிறேன்: லோகேஷ்

சுருதி ஹாசன் இசையில் கமல்ஹாசனின் பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். யாரும் காரி துப்பாத அளவிற்கு ஏதாவது பண்ணி இருக்கிறேன் என்று நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் ஆக்சன் படங்களை எடுப்பதில் கை தேர்ந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் எடுக்கும் படங்களில் அவருக்கென ஒரு தனி ஸ்டைல் இருக்கும். கடைசியாக 2023 -ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கமல்ஹாசன் திரையுலக பயணத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் மிகவும் முக்கியமான படம். ரஜினி காந்தின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தன் நண்பர்களுடன் மிக மகிழ்ச்சியுடன் பிறந்தநாளை கொண்டாடினார். அர்ஜூன் தாஸ், இயக்குனர் ரத்ன குமார், நடிகர் சிவகார்த்திகேயன், ஸ்ருதி ஹாசன் போன்ற பலர் அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். அன்று அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இன்டிபென்டன்ட் ஆல்பம் பாடலுக்கான பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது. சுருதி ஹாசன் இசையில் கமல்ஹாசனின் பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகராக நடித்தது குறித்து லோகேஷ் கனகராஜ் கூறுகையில், பாடலின் கான்செப்டை ஸ்ருதி சொன்னாங்க. நான் நடிக்கவேண்டுமென்று இதுவரைக்கும் முயற்சி பண்ணதில்லை. பாடலின் ஸ்கிரிப்ட் புக் கொடுத்தாங்க. அதை படித்துவிட்டு துவாரக்கை சந்தித்தேன். அதன் பிறகு மொத்த குழுவையும் சந்தித்தேன். கடைசி வரைக்கும் ஏன் என்னை தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. சூட்டிங்கிற்கு போவதற்கும் நான் தைரியமாக இல்லை. ஸ்ருதி, துவாரக் மற்றும் மொத்த குழுவையும் நம்பினேன். யாரும் காரி துப்பாத அளவிற்கு ஏதாவது பண்ணி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்” என்றார்.