நடிகை மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து?

மலையாள நடிகை மஞ்சு வாரியர் கடந்த சில நாட்களாக காணவில்லை. அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என பிரபல மலையாள இயக்குநர் சணல் குமார் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரபல மலையாள இயக்குநர் சணல் குமார் சசிதரன் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளது:

பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அவரை 4 நாட்களாக காணவில்லை. அவர் கந்துவட்டிக்காரர்களின் காவலில் இருக்கிறார். அவருடைய மேனேஜர்கள் பினீஷ் சந்திரன் மற்றும் பினு நாயர் ஆகியோரின் பெயர்களையும் அவர் வீட்டுக் காவலில் இருப்பதாக நம்புவதற்கான காரணங்களையும் நான் பதிவிட்டு இருந்தேன். ஆனால் இந்த பதிவை போட்டு 4 நாட்களாகியும் இதுவரை மஞ்சு வாரியரோ அவர் சம்பந்தப்பட்டவர்களோ இதுவரை பதிலளிக்கவில்லை. மஞ்சு வாரியரின் மவுனம் எனக்கு சந்தேகத்தை எழுப்புகிறது.

மலையாள திரையுலகில் பாலின சமத்துவத்திற்காக செயல்படும் Women in cinema Collective அமைப்பிற்கும் ஈமெயில் அனுப்பியுள்ளேன். மவுனம் காக்கும் மஞ்சு அவர்களும் இந்த விஷயத்தில் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்கள். இதை நான் சமூகவலைதளங்களில் கூறும் போது பலரும் இந்த மிகத் தீவிரமான பிரச்சினையை நகைச்சுவையாக பார்க்க முயற்சிக்கிறார்கள். கேரளாவில் உள்ள ஊடகங்கள் இந்த விவகாரத்தை கண்டு கொள்ளாதது போல் நடிக்க முயல்வது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய அளவில் பாராட்டப்பட்ட ஒரு நடிகையின் வாழ்க்கை மற்றும் சுதந்திரம் தொடர்பான பிரச்சினை எழுப்பப்பட்டிருப்பதால், தேசிய ஊடகங்கள் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அந்த பேஸ்புக் பதிவில் சசிதரன் தெரிவித்துள்ளார். இதனால் மலையாள திரை உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .