நடிகை மீனா மறுமணம் செய்துகொள்ள ஓகே சொன்னார்?

நடிகை மீனா மறுமணம் செய்துகொள்ள ஓகே சொன்னதற்கான காரணம் என ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒரு காலத்தில் கால்ஷீட்டே கிடைக்காத அளவுக்கு பிஸியாக இருந்தவர் நடிகை மீனா. 1990களில் பலரது கனவுக் கன்னியாகவும் இருந்தவர். கண்ணழகி மீனா என்றும் ரசிகர்களால் அழைப்படுபவர் மீனா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், கார்த்திக், பார்த்திபன், அஜித் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் மீனா. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி என பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார் மீனா. 42 வயதே ஆன நடிகை மீனா சமீபத்தில் தனது கணவரை பறிகொடுத்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த வித்யா சாகர் என்ற சாப்ட்வேர் என்ஜினியரை திருமணம் செய்தார் நடிகை மீனா. நடிகை மீனாவுக்கும் வித்யா சாகருக்கும் நைனிகா என்ற மகள் உள்ளார். விஜய்யின் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் நைனிகா. தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜனவரி மாதம் முதல் நுரையீரல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட வித்யா சாகர் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. நாளுக்கு நாள் அவரது நுரையீரல் தொற்று அதிகமானது. இதனால் நுரையீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார் வித்யா சாகர். ஆனால் மாற்று நுரையீரல் கிடைக்காததால் சுய நினைவை இழந்த வித்யா சாகர் கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் மீனா மற்றும் அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் சினிமா மற்றும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனால் சோகத்தில் மூழ்கிய நடிகை மீனாவை அவரது தோழிகளும் குடும்பத்தினரும்தான் கொஞ்சம் கொஞ்ச கொஞ்சமாக இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் நடிகை மீனாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் செய்திகள் தீயாய் பரவி வருகிறது. தங்களின் குடும்ப நண்பரை இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ள நடிகை மீனா ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

முதலில் மறுமணத்திற்கு ஒப்புக்கொள்ளாத நடிகை மீனா, குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தோழிகளின் வற்புறுத்தலால் இரண்டாவது திருமணத்திற்கு ஓகே சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடிகை மீனா தனது அப்பாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பறிகொடுத்தார். அந்த சோகம் மறைவதற்குள் திருமணம் ஆன 13 ஆண்டுகளில் கணவரையும் இழந்துள்ளார் மீனா.

இந்நிலையில் ஒரு மகளை வைத்துக் கொண்டு ஆண் துணையில்லாமல் இருக்க வேண்டாம் என்றும் மீனா மற்றும் அவரது மகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என குடும்பத்தினர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. தொடர் வற்புறுத்தலால் நடிகை மீனா ஒப்புக்கொண்டதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்து மீனா தரப்பு விளக்கம் அளித்தால் மட்டுமே உறுதியாகும்.