எனது போக்கில் வாழவிடுங்கள்: ரச்சிதா பதிவு வைரல்!

சின்னத்திரை நடிகையும் பிக்பாஸ் சீசன் 7 பிரபலம் தினேஷின் மனைவியுமான ரச்சிதா போட்ட பதிவு அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் சீசன் 7ல் முக்கிய பங்கேற்பாளராக இருப்பவர், தினேஷ். இவரும் சின்னத்திரை நடிகை ரச்சிதா என்கிற ரச்சிதா மகாலட்சுமியும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தினேஷ், ரச்சிதா மீது மிகவும் அன்பாக இருக்கிறார் என்பது பிக்பாஸ் சீசன் 7 பார்க்கும் எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால், தான் ஒருவேளை பிக்பாஸ் சீசன் 7 டைட்டிலை வென்றால் அதை தனது மனைவி ரச்சிதாவைத் தேடிப்பிடித்துப் போய் கொடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார். ரச்சிதா விவாகரத்து பெறுவதில் விடாமுயற்சி எடுத்தாலும் அதற்கு தினேஷ் சம்மதம் தெரிவிக்கவில்லை எனத்தெரிகிறது. மேலும் ஒரு நாள் ரச்சிதா தன்னைப் புரிந்துகொண்டு திரும்பிவந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் தினேஷ் காத்திருக்கிறார்.

சமீபத்தில் தினேஷின் அம்மா, அளித்த பேட்டியில் கூட, ‘ தினேஷ் ரச்சிதா மீது வைத்திருக்கும் அன்பினை, அவள் ஒரு விஷயமும் இல்லாதவள் போல கடந்து சென்று பயணிக்கத் தொடங்கிவிட்டாள். அவனை ஐந்து வருடங்களாக கஷ்டப்படுத்திவிட்டார்கள். எல்லா தாய், தகப்பனுக்கும் உள்ள வலி தான் தங்களுக்கும் இருக்கிறது’ எனத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ரச்சிதா மகாலட்சுமி, ‘சாவு வரும்போது உயிரிழக்க வேண்டும் என எண்ணுபவர்களில் நானும் ஒருத்தி. அதனால் என்னுடைய வாழ்க்கையை எனது போக்கில் வாழவிடுங்கள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், ‘உங்கள் நம்பகத்தன்மை சிலரின் இருப்பை விட பெரிதாக இருக்கும்போது, அவர்கள் அதை விரும்ப மாட்டார்கள்’ எனப் பதிவிட்டுள்ளார்.