தமிழ்நாடு அரசு உத்தரவு:

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பிரசாதம் செய்ய ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் மட்டுமே கொள்முதல் செய்ய செய்து பயன்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கோவில்கள் தயாரிக்கும் பிரசாதங்கள் மற்றும் இதர தேவைகளுக்கு ஆவின் நெய் வெண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

திருக்கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் ஆவின் தயாரிப்புகளான வெண்ணை மற்றும் நெய் பொருட்களை மட்டுமே பயன்படுத்தி தயார் செய்ய இந்த முறை ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் மற்றும் இதர தேவைகளுக்கு ஆவின் நிறுவனம் மூலம் தயார் செய்யப்படும் வெண்ணெய் மற்றும் நெய் பொருட்களை கொள்முதல் செய்ய உத்தரவிடுமாறும்  மற்றும் 15 மில்லி லிட்டர் அளவு கொண்ட பேக்கிலிருந்து  20 கிலோ கிராம் வரையிலான எடை கொண்ட பேக்கிங் வரை ஆவின்  நிறுவனங்களில் விற்பனைக்கு தயாராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.