குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்வு: ரிசர்வ் வங்கி

குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்வு. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு காரணமாக வீட்டுக்கடன், வாகனக்கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் கூறியதாவது:-

உக்ரைனில் நடந்து வரும் யுத்தம் உலக நாடுகளின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் குறுகியகால கடன்களுக்கான வட்டி (ரெப்போ) விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்கும் வகையில், நிதிக்கொள்கை குறித்த நிபுணர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் வட்டி விகிதம் உயருகிறது.
இவ்வாறு சக்தி காந்ததாஸ் கூறினார்.

ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு காரணமாக வீட்டுக்கடன், வாகனக்கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.