ஜோ பைடன் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்கு இன்று சென்றார். பள்ளி வளாகத்திற்கு வெளியே தற்காலிகமாக அமைந்துள்ள நினைவிடத்தில் அவர் சில நிமிடங்கள் அமைதியாக நின்று அஞ்சலி செலுத்தினார்.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் கடந்த வாரம் துப்பாக்கியுடன் நுழந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த கொடூர இந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சல்வடொர் ரமொஸ் என்ற இளைஞனை போலீசார் சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்கு இன்று சென்றார். பள்ளி வளாகத்திற்கு வெளியே தற்காலிகமாக அமைந்துள்ள நினைவிடத்தில் அவர் சில நிமிடங்கள் அமைதியாக நின்று அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் ஆதரவு தெரிவித்த அதிபர் ஜோ பைடன், அவர்களுடன் அங்குள்ள தேவாலயத்தில் பிராத்தனை செய்தார்.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டியும், துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டங்களைக் கடுமையாக்கக் கோரியும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. இந்த நிலையில் இது போன்ற துப்பாக்கிசூடு சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீர்வு கூறியுள்ளார். இது தொடர்பாக ஹூஸ்டனில் நடைபெற்ற நேஷனல் ரைபிள் அசோசியேஷனின் மாநாட்டில் பேசிய டிரம்ப் கூறுகையில், ” டெக்சாஸ் துப்பாக்கிசூட்டில் ஆயுதமேந்திய நபரின் தாக்குதலின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களைத் தற்காத்துக் கொள்ள எந்த வழியும் இல்லை. துப்பாக்கியுடன் இருக்கும் தீய மனிதனை நிறுத்த ஒரே வழி, ஒரு நல்ல மனிதனின் கையில் துப்பாக்கியை கொடுப்பது தான். ஒரு பள்ளிக்கு ஒரே நுழைவுப் பாதை மட்டுமே இருக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் வலுவான தடுப்பு அமைப்பு மற்றும் உலோகங்களை கண்டறியும் கருவிகள் போன்றவை இருக்க வேண்டும். இது பணத்தை பற்றியது அல்ல. இது விருப்பத்தின் பற்றியது. உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா 40 பில்லியன் டாலர் கொடுக்க முடியும் என்றால் நாம் இதையும் செய்யலாம்” என டிரம்ப் பரிந்துரைத்தார்.