அன்பாக உபசரித்ததற்கு நன்றி: கேரள முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்!

தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை சிறப்பாக நடத்தியதுடன், அன்பாக உபசரித்த கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த, தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தை சிறப்பாக நடத்தியதுடன், விருந்தினர்களாக சென்ற தங்களுக்கு, அன்பான உபசரிப்பு அளித்தமைக்கு நன்றி தெரிவித்து, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நேற்று, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், திருவனந்தபுரத்தில் (03.03.2022) தென் மண்டல கவுன்சிலர் கூட்டத்தை சிறப்பாக நடத்தியமைக்காக பாராட்டுகளை தெரிவித்துள்ளார். விருந்தினர்களாக சென்ற தங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான உபசரிப்புகளுக்கு நன்றி கூறியுள்ளார். மேலும் அக்கடிதத்தில், சமீப காலத்தில் முன்மொழியப்பட்ட முன்னெடுப்புகளை விரைவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வோம் என்று தாம் நம்புவதாக தனது கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.