ஜம்மு-காஷ்மீரில் மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 12 பேர் பலி!

ஜம்மு – காஷ்மீரில் மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள பிராரி பல்லா சாவ்ஜியன் அருகே மினி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ராணுவம், உள்ளூர் போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 12 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 24 பயணிகள் காயமடைந்துள்ள நிலையில், மண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதில் ஐந்து பேர் சிறப்புச் சிகிச்சைக்காக ஜம்மு நகருக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ‘பூஞ்ச் ​​பகுதியில் நடந்த விபத்தில் உயிர் இழப்பு வருத்தமளிக்கிறது. எனது எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். விபத்தில் இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு 50,000 வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.