நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி!

நேபாளத்தில் இன்று கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 13 பேர் உயிரிழந்தனர்

நேபாளத்தில் நிலச்சரிவு காரணமாக அச்சாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேரை காணவில்லை. இதனையடுத்து, மீட்பு பணியில் ஈடுபட்டு, காணாமல் போனவர்களில் இதுவரை 10 பேர் மீட்கப்பட்டனர். மேலும் 10 பேரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.