பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாள்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை குறித்து பேசியுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதகாவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறியுள்ளார்.