கனமழை எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் 8 விமான சேவைகள் ரத்து!

சென்னையில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது வலு குறைந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தமிழகம், புதுச்சேரி கடற்கரையை ஒட்டி நிலவுகிறது. சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை, விமான நிலையத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லக்கூடிய 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை, ஹைதராபாத், கர்னூல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.