தாய்லாந்து இளவரசிக்கு இதய நோய் பாதிப்பு!

தாய்லாந்தின் இளவரசி இதய நோய் பாதிப்பின் காரணமாக தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தாய்லாந்தின் மன்னரான மஹா வஜிரலோங்கோர்னின் முதல் மனைவியின் ஒரே மகள் இளவரசி பஜ்ராகிதியாபா மஹிடோல். 44. கடந்த வாரம் பாங்காக் அருகே நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இளவரசி மஹிடோல் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து தாய்லாந்து அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இளவரசியின் உடல்நிலையில் முன்பிருந்ததைவிட சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவரது இதய துடிப்பு சரிவர இயங்கவில்லை. இதனால் இதயத் துடிப்பை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
அவரது நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்டவற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றை மேம்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவக்குழுவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.