பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு ஜோ பைடன் இரங்கல்!

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டுவிட்டர் வழியே தனது இரங்கலை தெரிவித்து உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்று அதிகாலை வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தாயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன்பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றன. இதனையடுத்து காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டுவிட்டர் வழியே தனது இரங்கலை தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு ஜில்லும், நானும் ஆழ்ந்த மற்றும் உள்ளார்ந்த உணர்வு சார்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம். இந்த கடினம் வாய்ந்த சூழலில் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்காக நாங்கள் பிரார்த்தனை செய்து கொள்கிறோம் என அவர் தெரிவித்து உள்ளார்.