டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவாலிடம் அத்துமீறிய கார் டிரைவர் கைது!

டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் 10-15 மீட்டர் வரை காரில் இழுத்துச் செல்லப்பட்டார். குடிபோதையில் டிரைவர் அவரிடம் தவறாக நடந்து கொண்டார். இதையடுத்து கார் டிரைவர் டெல்லி போலீசார் கைது செய்தனர்.

டெல்லி பெண்கள் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால். இவர் இன்று எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார். அப்போது குடிபோதையில் இருந்த கார் டிரைவர் ஒருவர், அவரை தனது காரில் ஏறுமாறு வற்புறுத்தியுள்ளார். பின்னர் அவரிடம் டிரைவர் தவறாக நடந்து கொண்டார். இதையடுத்து காரின் கண்ணாடியை மூடிவிட்டு 10 முதல் 15 மீட்டர் தூரம் வரை ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை உறுதி செய்த டெல்லி போலீசார் ஹரிஷ் சந்திரா என்ற கார் டிரைவரை கைது செய்தனர்.

இது குறித்து டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறுகையில், நான் இரவில் பெண்கள் பாதுகாப்பை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, குடிபோதையில் ஒரு நபர் என்னை துன்புறுத்தினார். அவரது அநாகரீகமான செயலை நான் எதிர்த்தபோது, அவர் தனது காரின் கண்ணாடியை மூடிவிட்டு சிறிது தூரம் என்னை இழுத்துச் சென்றார். இதையடுத்து கடவுள் என் உயிரைக் காப்பாற்றினார். மற்ற பெண்களின் பாதுகாப்பு பற்றி என்ன நினைப்பது என்று கூறியுள்ளார்.

இது குறித்து டெல்லி போலீசார் கூறுகையில், ஸ்வாதி மாலிவால், அதிகாலை 3.11 மணியளவில் எய்ம்ஸ் கேட் 2க்கு எதிரே, குடிபோதையில் இருந்த கார் டிரைவர் ஒருவர் 10-15 மீட்டர் தூரம் காரில் ஏற்றி சென்றுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட ஹரிஷ் சந்திரா,(47), மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினர்.