சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவை நிஜமாக்குவோம்: பிரதமர் மோடி

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திரப் வீரர்களின் கனவை நனவாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

குடியரசு நாளையொட்டி டுவிட்டரில் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நரேந்திர மோடி, ‘இந்தத் தருணம் சிறப்பானது. காரணம் நாடு விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில் நாம் குடியரசு நாள் விழாவைக் கொண்டாடுகிறோம். இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும், நம் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நிஜமாக்குவோம். இந்தியர்கள் அனைவருக்கும் குடியரசு நாள் விழா வாழ்த்துகள்’ எனப் பதிவிட்டுள்ளார்.