சென்னை அண்ணாசாலையில் கட்டிடம் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு!

அண்ணாசாலையில் பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சாலையில் நடந்து சென்ற பெண் மீது கட்டிடம் விழுந்ததால் அந்த பெண் உடல் நசுங்கி உயிரிழந்தார். 2 பெண்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை ஆயிரம் விளக்கு மசூதி அருகே நாள் முழுவதும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கும் அண்ணாசாலையில் பழமையான பயன்படுத்தப்படாமல் அதிகமான கட்டிடங்கள் உள்ளது. அந்த பழைய கட்டிடங்களை இடிப்பதற்கு தயாராகி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை தானாகவே இடிந்து விழுந்தது. காலையில் வேலைக்காக சென்று கொண்டிருந்தவர்களின் மீது சுவர் விழுந்தது. இதில் சிலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 2 பெண்கள் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் மீட்பு பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த கட்டிட விபத்தினால் அண்ணாசாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் 1 கி.மீ தூரம் அணிவகுத்து ஊர்ந்து செல்கிறது. கட்டிடத்தின் உரிமையாளர் யார் என்றும் கட்டிட விபத்து நடந்ததையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.