மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை மீது வழக்குப்பதிவு!

தரங்கம்பாடி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வேதாரண்யம் கடலோர
குழும காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தரங்கம்பாடி மீனவா்கள் மீது இரும்பு பைப்பை கொண்டு இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை இரவு தாக்கி நடத்தியுள்ளனா். இதில் காயமடைந்த 6 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், மீனவா்களின் வலைகளைச் சேதப்படுத்தி, ஜிபிஎஸ் கருவி, தூண்டில்,பேட்டரிகள் ஆகியவற்றை இலங்கைக் கடற்படையினர் எடுத்துச் சென்றதாக கடலோர காவல் நிலையத்தில் தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது 3 பிரிவுகளில் வேதாரண்யம் கடலோர குழும காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.