சென்னை பயணம் குறித்து பிரதமர் மோடி தமிழில் டுவிட்டர் பதிவு!

சென்னையில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகிறார். இதையொட்டி அவர் டுவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

சென்னையில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகிறார். இதையொட்டி அவர் தமிழில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

சென்னையில் @aaichnairport விமான நிலையத்தின் புதிய முனையக்கட்டிடம் திறந்து வைக்கப்படஉள்ளது. தொடர்ந்து சென்னை-கோயமுத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை துவக்கி வைத்து, பிறகு ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு நிறுவன விழாவிலும் கலந்து கொள்ள உள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.