பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் கெஜ்ரிவால் ஆஜராக கோவா போலீஸ் சம்மன்!

பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏப்ரல் 27-ந் தேதி ஆஜராக வேன்டும் என்று கோவா போலீசார் சம்மன் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவா சட்டசபை தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களில் வென்று கணக்கை தொடங்கியது. தேர்தல் பிரசாரத்தின் போது ஆம் ஆத்மி கட்சியினரால் பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது என்பது போலீஸ் பதிந்த வழக்கு. இந்த வழக்கில் வரும் 27-ந் தேதி கெஜ்ரிவால் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கோவா போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது. கோவாவில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. பாஜகவை காங்கிரஸ் போல் எதிர்க்கிறது ஆம் ஆத்மி கட்சி. தற்போது கோவா மாநில போலீஸ், கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.