நாடு முழுவதும் 100 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

நாடு முழுவதும் 100 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

போதைப் பொருள்கள் கடத்தல் கும்பல், தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய 5 வழக்குகளில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களிலும் காவல்துறையினர் உதவியுடன் 100 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.