இந்தியாவின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் காமராஜர்: பிரதமர் மோடி

கர்ம வீரர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “காமராஜரின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருமகன், சமூக அதிகாரமளித்தலுக்கு அவர் அளித்த முக்கியத்துவம் நம் அனைவருக்கும் வழிகாட்டும் சக்தியாகும். வறுமை ஒழிப்பு மற்றும் மக்கள் நலன் மீதான அவரது தொலைநோக்கை நிறைவேற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை நாம் மீண்டும் அர்ப்பணிப்போம்,” எனத் தெரிவித்துள்ளார்.