உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீரென வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்: 10 பேர் பலி!

உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீரென வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மரால் 10 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் அலக்னாந்தா ஆறு உள்ளது. இந்த ஆற்றின் கரையோரம் இன்று ஏராளமானவர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் டிரான்ஸ்பார்மர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் டிரான்ஸ்பார்மர் அருகே நின்ற போலீஸ்காரர் உள்பட 10 பேர் பலியாகினர். மேலம் பலத்த காயமடைந்து பலர் உயிருக்கு போராடினார்கள். தங்களை காப்பாற்றும்படி அவர்கள் கதறினர். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ்சுக்கு போன் செய்யப்பட்டது. விரைவாக ஆம்புன்ஸ் வாகனம் வந்தது. இதையடுத்து படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். AD மேலும் மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். மின்வாரிய பணியாளர்கள், அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இருப்பினும் டிரான்ஸ்பார்மர் வெடிப்புக்கான சரியான காரணம் என்பது உடனடியாக தெரியவில்லை.