தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனை!

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 15க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெல்லையில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களின் 15 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இதன் பின்னணி குறித்து விசாரிக்கையில், திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் களத்தில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திற்கு அடுத்து உள்ள திருபுவனம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 5 பேர் தலைமறைவாகி உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் திருச்சி, விழுப்புரம், தஞ்சை, நெல்லை, உசிலம்பட்டி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது என கூறப்படுகிறது. இதன்படி, நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் முபாரக் இல்லத்தில் இந்த சோதனை நடைபெறுகிறது. கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள துறவி கிராமத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.